Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் பைக்குகள் நேருக்கு நேர் மோதல்! – புதுமுக நடிகர் பலி!

Webdunia
செவ்வாய், 29 மார்ச் 2022 (15:24 IST)
சென்னை செங்குன்றம் பகுதியில் பைக்குகள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் புதுமுக நடிகர் பலியானார்.

சென்னை செங்குன்றம் அடுத்த மொண்டியம்மன் நகர் ஜீவா தெருவை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் புதிதாக எடுக்கப்பட்டு வரும் செங்குன்றம் என்ற திரைப்படத்தில் புதுமுக நாயகனாக நடித்து வருகின்றார்.

நேற்று முன்தினம் ஷூட்டிங் முடித்துவிட்டு ஜெயக்குமார் பைக்கில் வீடு திரும்பி கொண்டிருந்தபோது, செங்குன்றம் – திருவள்ளூர் நெடுஞ்சாலையில் நேர் எதிரே வந்த சரவணன் என்பவரது பைக் மோதியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த ஜெயக்குமார், சரவணன் இருவரும் பாடியநல்லூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டானில் அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி ஜெயக்குமார் பரிதாபமாக உயிரிழந்துள்ளார், சரவணனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசே தொடங்கிய ஓட்டுனர் பயிற்சி பள்ளி.. கார், பைக் ஓட்டும் பயிற்சிக்கு எவ்வளவு கட்டணம்?

அவதூறு வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும்.! ராகுலுக்கு பறந்த உத்தரவு..!!

இன்று இரவு 10 மாவட்டங்களில் கொட்டப்போகுது மழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அப்பர் பெர்த் கழன்று விழுந்ததால் ரயில் பயணி பரிதாப பலி.. ரயில் பயணத்தில் பாதுகாப்பு இல்லையா?

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எத்தனை பேர் போட்டி: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

அடுத்த கட்டுரையில்
Show comments