Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல்: தமிழக அரசு உத்தரவு

Webdunia
வியாழன், 25 நவம்பர் 2021 (06:35 IST)
பேரறிவாளனுக்கு மீண்டும் ஒரு மாதம் பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிக்கி கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனுக்கு சிறுநீரக தொற்று உள்பட ஒரு சில நோய்கள் இருப்பதால் பரோல் வேண்டும் என அவரது தாயார் அற்புதம்மாள் மனு அனுப்பினார்
 
இந்த மனு பரிசீலனை செய்யப்பட்டு கடந்த மே மாதம் ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்டது. இதனை அடுத்து ஒவ்வொரு மாதமும் பரோல் காலம் முடியும்போது மீண்டும் பரோல் காலத்தை நீடிக்க வேண்டுமென அவரது தாயார் மனு அளித்திருந்தார் 
 
அதன்படி இதுவரை 5 முறை பரோல் வழங்கப்பட்ட நிலையில் இன்றுடன் முடிவடைந்தது. இதனை அடுத்து பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் மீண்டும் பரோல் நீடிக்க மனு அனுப்பி இருந்த நிலையில் அந்த மனுவை பரிசீலனை செய்த தமிழக அரசு பேரறிவாளனுக்கு 6வது முறையாக மீண்டும் ஒரு மாதம் வரை நீடித்து உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments