Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் மீண்டும் தொடங்கியது பலத்த மழை!

Webdunia
வியாழன், 25 நவம்பர் 2021 (06:33 IST)
வடகிழக்கு பருவமழை மற்றும் வங்கக்கடல் தோன்றிய குறைந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக மழை பெய்தது என்பதும் இதனால் வெள்ளம் ஏற்பட்டு மக்கள் கடும் அவதி இருந்தனர் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். 
 
இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் மழை பெய்யாமல் வெயில் அடித்ததால் மக்கள் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் புதிய காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழகம் முழுவதும் ஆரஞ்ச் எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் இன்று முதல் மீண்டும் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவிக்கப்பட்டிருந்தது
 
அதன்படி இன்று காலை சென்னையில் மீண்டும் கனமழை பெய்ய தொடங்கியுள்ளது. சென்னையில் நுங்கம்பாக்கம், ராயப்பேட்டை, பட்டினப்பாக்கம், அடையார், எம்.ஆர்.சி நகர் ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

3 நாளில் 3 லட்ச ரூபாய் பிச்சை எடுத்து சம்பாதித்தவர் கைது.. அதிர்ச்சி தகவல்..!

பிஎஃப் பணத்தை இனி ஏடிஎம்-இல் எடுக்கலாம்.. மத்திய தொழிலாளர் துறை அறிவிப்பு..!

அதிமுக உறுப்பினர்கள் இன்று ஒருநாள் சஸ்பெண்ட்: சபாநாயகர் அப்பாவு உத்தரவு..!

ரூல்ஸ் போட்டவர்களை ரூ. போட்டு ஓடவிட்டவர் முதல்வர்: உதயநிதி ஸ்டாலின் பேச்சு..!

பரந்தூர் பிரச்சினை முதல் டாஸ்மாக் ஊழல் வரை! - தவெக கொண்டு வந்த 17 தீர்மானங்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments