Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கிளாம்பாக்கத்தில் மேம்பாலம் அமைக்க திட்டம்.. தமிழக அரசு முடிவு

Kilambakkam

Siva

, வெள்ளி, 31 மே 2024 (21:31 IST)
கிளாம்பாக்கத்தில்  மேம்பாலம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன' 
 
கடந்து சில மாதங்களுக்கு முன்னால் கோயம்பேட்டிலிருந்து கிளம்பிய அனைத்து தென் மாவட்ட பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்து தான் கிளம்பும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது அனைத்து பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்து தான் கிளம்புகின்றன என்பதும் தென் மாவட்டங்களில் இருந்து வரும் பேருந்துகள் அனைத்தும் கிளாம்பக்கத்திலேயே நின்று விடுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் கிளாம்பாக்கத்தில்  கூடுதல் வசதி செய்து தர தமிழக அரசு திட்டமிட்டு உள்ள நிலையில் கிளாம்பாக்கத்தில் மின்சார ரயில் நிலையம், மெட்ரோ ரயில் நிலையம் ஆகிய வசதிகளும் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. 
 
இந்த நிலையில் தற்போது கிளாம்பாக்கத்தில் மேம்பாலம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்திருப்பதாகவும் கிளாம்பாக்கத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த மேம்பால பணிகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 
Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளத்துரை சஸ்பென்ட் ரத்து.. முதல்வர் தலையிட்டாரா?