காவிரி நீர் விவகாரம் ; உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மீண்டும் மனு
காவிரி நீர் விவகாரம் ; உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மீண்டும் மனு
தமிழகத்திற்கு 3000 கன அடி திறந்து விடவேண்டும் என்ற காவிரி மேற்பார்வைக் குழுவின் உத்தரவிற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் ஆட்சேபணை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்திற்கு 3000 கன அடி நீரை திறந்து விட வேண்டும் என, காவிரி மேற்பார்வைக் குழு ஒரு வாரத்திற்கு முன்பு உத்தரவிட்டிருந்தது. ஆனால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மறுசீராய்வு மனு ஒன்றை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
கடந்த 20ம் தேதி, கர்நாடக அரசு தாக்கல் செய்த சீராய்வு மனு விசாரணைக்கு வந்தது. அப்போது உச்ச நீதிமன்றம், காவிரி மேலாண்மை வாரியத்தை 4 வாரங்களுக்குள் மத்திய அரசு அமைக்க வேண்டும் அதிரடி உத்தரவை பிறப்பித்தது. மேலும் கடந்த 21ம் தேதி முதல் வரும் 27-ஆம் தேதி வரை தமிழகத்திற்கு 6000 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிட வேண்டும் எனவும் உத்தரவிட்டது.
ஆனால், உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்காத கர்நாடக அரசு, தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என்று இன்று சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
இந்நிலையில், ஏற்கனவே காவிரி மேற்பார்வைக் குழு அளித்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு, இன்று உச்ச நீதிமன்றத்தில் ஆட்சேபனை மனு தாக்கல் செய்துள்ளது. அதில் 3000 கன அடி நீர் போதாது என்று குறிப்பிட்டுள்ளது.