கழிவறைக்குள் காதலன் என்னை பலாத்காரம் செய்தான்: மைனர் பெண் புகார்!
கழிவறைக்குள் காதலன் என்னை பலாத்காரம் செய்தான்: மைனர் பெண் புகார்!
மும்பையில் 17 வயது மைனர் பெண் ஒருவர் தன்னுடைய காதலன் தன்னை கழிவறையில் வைத்து பலாத்காரம் செய்ததாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இது தொடர்பாக அந்த பெண் காவல் சிலையத்தில் அளித்த புகாரில், கடந்த மாதம் 27-ஆம் தேதி என்னுடைய காதலன் மும்பை, தானேவில் உள்ள கல்யாண் ரயில் நிலையத்துக்கு என்னை அழைத்தார். அங்கு சென்ற என்னை அவர் இரண்டாவது நடைமேடையில் உள்ள கழிவறைக்கு அழைத்து சென்று பலாத்காரம் செய்தார்.
அதன் பின்னர் என்னை அவன் மிரட்டி அவனது இடத்துக்கு அழைத்து சென்று 10 முதல் 15 நாட்கள் வரை கட்டாயப்படுத்தி என்னுடன் உடலுறுவு வைத்துக்கொண்டான். பின்னர் என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறினான்.
ஆனால் காவல்துறை நடத்திய விசாரணையில் இது போன்ற சம்பவம் நடக்கவில்லை என ரயில்வே போலீசார் கூறியதாக தெரியவந்துள்ளது. இருப்பினும் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவான வீடியோக்களை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளனர்.