Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை முதல் தொழிற்பேட்டைகள் இயங்க தமிழக அரசு அனுமதி

Webdunia
ஞாயிறு, 24 மே 2020 (09:15 IST)
தொழிற்பேட்டைகள் இயங்க தமிழக அரசு அனுமதி
கொரனோ வைரஸ் தாக்கம் காரணமாக தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு உத்தரவு கடந்த மார்ச் மாதம் முதல் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது நான்காம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது என்பதும் இந்த ஊரடங்கு உத்தரவு வரும் 31ம் தேதி வரை நீடிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இந்த நான்காம் கட்ட ஊரடங்கில் மத்திய அரசின் வழிகாட்டுதலுக்கு ஏற்ப மாநில அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது என்பது தெரிந்ததே 
 
டாஸ்மாக் கடைகள் திறப்பது, ஆட்டோக்கள் இயங்க அனுமதித்தது, சலூன் கடைகள் திறக்க நிபந்தனையுடன் அனுமதி அளித்தது உட்பட பல தளர்வுகளை அவ்வப்போது தமிழக அரசு அறிவித்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் நாளை முதல் தொழிற்பேட்டைகளை இயங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதனை அடுத்து சென்னை கிண்டி, அம்பத்தூர் உட்பட 17 தொழிற்பேட்டைகள் நாளை முதல் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்பதும் , இந்த தொழிற்பேட்டைகளில் 25% தொழிலாளர்கள் மட்டுமே கொண்டு இயங்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது
 
மேலும் தொழிற்பேட்டைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் மாஸ்க் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் அவ்வப்போது கிருமி நாசினி தெளிக்க வேண்டும் என்றும் தொழிலாளர்கள் அவ்வப்போது சோப்பு போட்டு கைகளை கழுவுவதை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 பெண்களை காதலித்து இருவருக்கும் ஒரே மேடையில் தாலி கட்டிய இளைஞர்.. ஆச்சரிய தகவல்..!

17 ஆண்டுகளாக பெண்ணின் வயிற்றில் இருந்த கத்தரிக்கோல்.. டாக்டரின் கவனக்குறைவால் சோகம்..!

பாம்பன் புதிய ரயில் பாலத்திற்கு அப்துல்கலாம் பெயர்: பிரேமலதா வலியுறுத்தல்..!

காந்தியைப் பிடிக்காதவர்களுக்கு அவர் பெயரில் உள்ள திட்டமும் பிடிக்கவில்லை: முதல்வர் ஸ்டாலின்..!

மியான்மர் நிலநடுக்கம்.. உயிரிழப்பு 1,000-ஐ தாண்டும் என அச்சம்! தீவிர மீட்புப்பணிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments