Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மன்னார் வளைகுடாவில் கடற்பசு பாதுகாப்பகம்! – தமிழக அரசு அரசாணை!

Webdunia
புதன், 23 பிப்ரவரி 2022 (13:37 IST)
மன்னார் வளைகுடா பகுதியில் உள்ள அபூர்வமானதும், அரிதானதுமான கடற்பசுக்களை பாதுகாக்க பாதுகாப்பகம் அமைக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தின் வங்க கடல் பகுதியில் அமைந்துள்ள மன்னார் வளைகுடா பகுதியில் அரிய கடல்வாழ் உயிரினமான கடற்பசு மற்றும் பலவகை உயிரினங்களும் வாழ்ந்து வருகின்றன. இந்த பகுதியை பாதுகாக்கப்பட்ட உயிரியல் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் பல காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் ரூ.5 கோடி மதிப்பில் பாக் விரிகுடா மற்றும் மன்னார் வளைகுடா பகுதியில் கடற்பசு பாதுகாப்பகம் அமைக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. முதற்கட்ட ஆய்வு பணிகள் மற்றும் நடவடிக்கைகளுக்காக ரூ.25 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

28 நாட்களில் 91 ஆயிரம் பேருக்கு கொரோனா! பெருந்தொற்றாக மாறுமா? - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

விருந்தில் பணத்தை காற்றில் தூக்கியெறிந்த பெண்.. நீதிமன்றம் கொடுத்த அதிர்ச்சி தண்டனை..!

ஆர்டர் செய்ததோ வீட்டு உபயோக பொருட்கள்.. வந்ததோ பொருட்களின் ஸ்டிக்கர்கள்.. அதிர்ச்சி தகவல்..!

6 வயது மகளை கண்களுக்காக விற்பனை செய்த தாய்.. வழக்கை விசாரித்த நீதிபதி அதிர்ச்சி..!

உச்சத்திற்கு சென்றது ஜியோ.. 1.55 லட்சம் சந்தாதாரர்களை இழந்த பி.எஸ்.என்.எல்.. அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments