Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கட்டண உயர்வு: மனுவை ஏற்ற மின்சார ஒழுங்குமுறை ஆணையம்!

கட்டண உயர்வு: மனுவை ஏற்ற மின்சார ஒழுங்குமுறை ஆணையம்!
, செவ்வாய், 19 ஜூலை 2022 (15:51 IST)
மின்சார வாரியத்தின் கட்டண உயர்வு தொடர்பான மனுவை தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஏற்றுள்ளது.


தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக  அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்தார். அதன்படி, தமிழகத்தில் 200 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு இரண்டு மாதங்களுக்கு ரூ.27.50 உயர்த்த பரீசீலிக்கப்பட்டுள்ளதாகவும், இரண்டு மாதங்களில் 301 - 400 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு ரூ.147.50 உயர்த்த பரிசீலனை செய்யப்பட்டுள்ளதாகவும், இரண்டு மாதங்களில் 501-600 யூனிட்கள் பயன்படுத்துவோருக்கு ரூ.155 உயர்த்த பரிசலிக்கப்பட்டுள்ளதாகவும், இரண்டு மாதங்களில் 601 - 700 யூனிட்கள் பயன்படுத்துவோருக்கு ரூ.275 உயர்த்த பரிசீலனை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் மின் கட்டண உயர்வு பரிசலீக்கப்பட்டுள்ளதற்கான காரணமும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆம், மின் வாரியத்துக்கு கடந்த 10 ஆண்டுகளில் பல்லாயிரம் கோடி ரூபாய் கணக்கில் எகிறியுள்ள கடன், மூன்றில் இரண்டு பங்கு நிலக்கரியை தனியாரிடம் இருந்து கொள்முதல் செய்ய வேண்டிய நிலை, மின் கட்டணத்தை உயர்த்த சொல்லி மத்திய அரசு தொடர்ந்து கொடுத்துவரும் அழுத்தம் போன்ற காரணங்களால் மின் கட்டணத்தை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து தற்போது வெளியான தகவலின் படி, மின்சார வாரியத்தின் கட்டண உயர்வு தொடர்பான மனுவை தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஏற்றுள்ளது. விரைவில் மின்சார கட்டண விவரம் மின்வாரிய இணையதளங்களில் வெளியிடப்படும்.

இந்த கட்டண உயர்வு குறித்த கருத்துக்களை அளிக்க மின் நுகர்வோர்களுக்கு 30 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மின் நுகர்வோர்களின் கருத்துகள் அனைத்தும் ஆகஸ்ட் 22க்கு முன்னதாக மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திற்கு அனுப்பப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சீன எல்லையில் சாலை பணி செய்த 19 ஊழியர்கள் மாயம்: சீனாவுக்கு கடத்தப்பட்டார்களா?