Publish Date: Mon, 05 Apr 2021 (13:22 IST)
Updated Date: Mon, 05 Apr 2021 (13:25 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் மற்றும் கொரோனா காரணமாக 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை தள்ளி வைப்பது குறித்து பள்ளிக்கல்வித் துறை ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
வழக்கமாக 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் மாதத்தில் நடைபெறும் நிலையில் இந்த ஆண்டு கொரோனா காரணமாக மே 3ம் தேதி தேர்வுகள் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. தற்போது சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்கு எண்ணும் பணி மே 2ம் தேதி நடைபெற உள்ளது. இதில் ஆசிரியர்கள், அரசு பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ள நிலையில் தேர்தல் முடிவுகளுக்கு அடுத்த நாளே பொதுத்தேர்வை நடத்துவதில் சிரமம் உள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் பொதுத்தேர்வை மேலும் சில நாட்கள் கழித்து தொடங்கலாமா என்பது குறித்து பள்ளிக்கல்வித் துறை தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Prasanth Karthick
Publish Date: Mon, 05 Apr 2021 (13:22 IST)
Updated Date: Mon, 05 Apr 2021 (13:25 IST)