Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனைத்து பாடங்களையும் பாதியாக குறைக்க முடிவு! – பள்ளிக் கல்வித்துறை!

Webdunia
ஞாயிறு, 29 நவம்பர் 2020 (09:51 IST)
கொரோனா காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ள சூழலில் அனைத்து பாடத்திட்டங்களிலும் 50% பாடங்களை குறைக்க பள்ளிக் கல்வித்துறை முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் இன்று வரை திறக்கப்படாமல் உள்ளது. இதனால் மாணவர்கள் ஆன்லைன் மற்றும் கல்வி தொலைக்காட்சி மூலமாக பாடங்களை படித்து வருகின்றனர். இதனால் மாணவர்களால் அதிகமான பாடங்களை படிக்க இயலாது என்பதால் 1 முதல் 9 வகுப்பு வரையிலான பாடங்களில் 40 சதவீதமும், 10,11,12ம் வகுப்புகளுக்கு குறிப்பிட்ட சில பாடங்களும் குறைக்கப்பட்டன.

இந்நிலையில் பள்ளி திறப்பது மேலும் தாமதமாகி வருவதால் பாடத்திட்டங்களை மேலும் குறைப்பது குறித்து பள்ளிக் கல்வித்துறை ஆலோசித்து முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. அதன்படி 1 முதல் 9 வகுப்பு வரையிலான பாடத்திட்டங்களில் 50 சதவீதத்தை குறைக்க முடிவெடுத்திருப்பதாகவும், அமைச்சர் செங்கோட்டையன் இதுகுறித்த அனுமதியை முதல்வரிடம் பெற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று 17 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்களில்..?

வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களின் மனைவிக்கு ரூ.1.10 கோடி.. ப்ரீத்தி ஜிந்தாவின் மனித நேயம்..!

45 வயது பெண்மணி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. பிறப்பு உறுப்பில் இரும்புக்கம்பிகள்..!

இந்தியாவின் தாக்குதலால் பாகிஸ்தானுக்கு ரூ.4500 கோடி இழப்பு.. இந்தியாவின் இழப்பு எவ்வளவு?

சத்குருவிற்கு ‘குளோபல் இந்தியன் விருது’! கனடா இந்தியா அறக்கட்டளை வழங்கியது!

அடுத்த கட்டுரையில்
Show comments