Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டிசம்பரில் காத்திருக்கு அதி கனமழை! – தமிழகத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை!

டிசம்பரில் காத்திருக்கு அதி கனமழை! – தமிழகத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை!
, ஞாயிறு, 29 நவம்பர் 2020 (09:17 IST)
வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில் டிசம்பர் தொடக்கத்தில் தமிழகத்தில் அதி கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்க கடலில் உருவான நிவர் புயலால் கடந்த சில வாரங்களாக தமிழகத்தில் கனமழை பெய்து வந்த நிலையில் நீர்நிலைகள் முழுவதுமாக நிரம்பியுள்ளன. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பாக நிவர் புயல் கரையை கடந்தது. தற்போது வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு நிலை டிசம்பர் 2ல் காற்றழுத்த மண்டலமாக மாற உள்ளதால் தமிழகத்தின் பல பகுதிகளில் அதி கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்திற்கு டிசம்பர் 2ல் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்கிறாரா ரஜினி? – நாளை நிர்வாகிகளுடன் ஆலோசனை!