Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாவட்டவாரியாக இன்றைய கொரோனா நிலைமை: சென்னைதான் இன்று டாப்

Webdunia
ஞாயிறு, 19 ஏப்ரல் 2020 (19:04 IST)
தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 105 என்றும், இதனையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1477ஆக உயர்ந்துள்ளது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 15 பேர்களில் எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேர் என்பதை தற்போது பார்ப்போம்.
 
கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இன்று சென்னை தான் டாப். சென்னையில் மட்டும் இன்று 50 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை அடுத்து  தஞ்சையில் 10 பேர்களும், விழுப்புரத்தில் 7 பேர்களும், கடலூரில் 6 பேர்களும், கோவை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் தலா 5 பேர்களும், தென்காசியில் 4 பேர்களும், நாகை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் தலா 3 நெல்லை, மதுரை, திருப்பத்தூரி ஆகிய மாவட்டங்களில் 2 பேர்களும் காஞ்சிபுரத்தில் ஒருவருக்கும் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். 
 
இதனையடுத்து தமிழகத்தில் சென்னையில் 285 பேர்களும், கோவையில் 133 பேர்களும், திருப்பூரில் 108 பேர்களும், ஈரோட்டில் 70 பேர்களும், திண்டுக்கல்லில் 74 பேர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments