Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்த முதல்வர்!

எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்த முதல்வர்!
, வெள்ளி, 2 மார்ச் 2018 (13:55 IST)
காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினுடன் தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார்.

 
காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு வெளியானதை அடுத்து கடந்த மாதம் 22ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இதில் காவிரி விவகராம் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. அப்போது மூன்று முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
 
அதில் திமுக செயல் தலைவர் ஸ்டாலினின், அனைத்து கட்சி தலைவர்களும் ஒன்று சேர்ந்து பிரதமரை சந்தித்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்ற கோரிக்கை தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, காவிரி விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினுடன் தொலைபேசியில் ஆலோசனை நடத்தியுள்ளார். மேலும் நாளை நேரில் சந்தித்த அழைப்பு விடுத்துள்ளார். இவர்களின் சந்திப்பு தலைமை செயலகத்தில் நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

6 வாரம் தேவையில்லை, 6 மணி நேரம் போதும்: அன்புமணி குறிப்பிடுவது எதை?