Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

6 வாரம் தேவையில்லை, 6 மணி நேரம் போதும்: அன்புமணி குறிப்பிடுவது எதை?

6 வாரம் தேவையில்லை, 6 மணி நேரம் போதும்: அன்புமணி குறிப்பிடுவது எதை?
, வெள்ளி, 2 மார்ச் 2018 (13:34 IST)
மத்திய அரசு காவிரி மேலாண்மை ஆணையத்தை ஆறு வாரங்களில் அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நிலையில், ஆறுவார கால அவகாசம் போதாது இன்னும் சில வாரங்கள் தேவை என மத்திய அரசு கூறி வருகிறது.

இந்த நிலையில் இதுகுறித்து கருத்து கூறிய பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், 'மத்திய அரசு நினைத்தால் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க 6 மணி நேரம் போதும். ஒரே ஒரு அரசாணை வெளியிட்டால் போதும். ஆனால் மத்திய அரசு கால அவகாசம் கேட்பது தவறு

காவிரி என்பது விவசாயிகள் பிரச்சனை என்பது மட்டுமல்ல. தமிழ்நாட்டின் உயிர்நாடியே அதுதான். இந்த ஆற்றை நம்பித்தான் 19 மாவட்ட மக்கள் உள்ளனர். அவர்களை குடிநீர் பிரச்சனை காவிரியால் தான் தீரும். சென்னை உள்பட ஆறு மாநகராட்சிகளுக்கு காவிரி தண்ணீர் தான் கைகொடுத்து வருகிறது. 40 லட்சம் விவசாயிகள் காவிரியை நம்பித்தான் உள்ளனர். உச்சநீதிமன்றம் ஆணையிட்டும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை என்றால் இதற்கு மேல் நாம் எங்கு போவது? என்று அன்புமணி ஆவேசமாக கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கார்த்திக் சிதம்பரம் - இந்திராணி முகர்ஜி நேருக்கு நேர் விசாரணை; சிபிஐயின் பலே பிளான்