Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஊரடங்கு நேரத்தில் விவசாயிகளுக்கு சிறப்பு சலுகை: தமிழக அரசு அறிவிப்பு

Webdunia
ஞாயிறு, 26 ஏப்ரல் 2020 (11:08 IST)
ஊரடங்கு நேரத்தில் விவசாயிகளுக்கு சிறப்பு சலுகை
கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து அனைத்து துறையினர்களை போலவே விவசாயிகளும் பெரும் பாதிப்பை அடைந்துள்ளனர். இந்த நிலையில் விவசாயிகளுக்கு ஒருசில சிறப்பு சலுகைகளை தமிழக அரசு சற்றுமுன் அறிவித்துள்ளது.
 
இதன்படி விளை பொருட்களை பாதுகாத்து சேமிக்க கிடங்கு வசதி மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது. விவசாய பொருட்கள் வைக்கும் கிடங்கு வாடகை கட்டணத்தை மேலும் 30 நாட்கள் செலுத்த தேவையில்லை என்று அறிவித்துள்ள தமிழக அரசு, பொருளீட்டு கடன் வசதியும் மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு என அறிவித்துள்ளது.
 
அதேபோல் காய்கறி, பழங்களை குளிர்பதன கிடங்குகளில் பாதுகாக்கும் கட்டணம் முழுவதும் ரத்து செய்யப்படுவதாகவும் தமிழக அரசு அறிவிப்பு செய்துள்ளது. மேலும் விவசாயிகளிடம் வசூலிக்கப்படும் பயன்பாட்டு கட்டணத் தொகை முழுவதையும் அரசே ஏற்கும்  என்றும், வியாபாரிகள் செலுத்தும் ஒரு சதவீதம் சந்தை கட்டணம் மே மாதம் வரை ரத்து செய்யப்படுவதாகவும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அறிவித்துள்ளார்.
 
முதல்வரின் இந்த அறிவிப்பு ஊரடங்கால் அவதியுற்று இருந்த விவசாயிகள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். மேலும் தமிழக முதல்வருக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்ப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments