Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

"கல்வி கட்டணம் செலுத்த கோரி கட்டாயப்படுத்தக் கூடாது" – தமிழக அரசு அறிவுறுத்தல்

, செவ்வாய், 21 ஏப்ரல் 2020 (18:26 IST)
தமிழகத்தில் கொரோன தொற்றைத் தடுக்க வரும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.  இந்நிலையில், ஏழை எளிய மக்கள் வேலைக்குச் செல்ல முடியாத நிலையில், பலரும் பசி , பட்டிணியால் வாடுகின்றனர். இவர்களுக்கு அரசும், பல்வேறு சேவை நிறுவனங்களும் மக்களும் உதவி வருகின்றனர்.

இந்நிலையில்,கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 3ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு உள்ள நிலையில்,  பள்ளி கல்லூரிகளில் கல்வி கட்டணத்தை செலுத்த கோரி கட்டாயப்படுத்தப்படுவதாக அரசின் கவனத்திற்கு வந்துள்ளது.

எனவேம் மாணவர்களையும், பெற்றோரையும் கல்வி கட்டணம் செலுத்துமாறு கட்டாயப்படுத்தக்கூடாது என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

மேலும், ஊரடங்கு உத்தரவு உள்ளநிலையில், பேரிடர் மேலாண்மை சட்டம் 2005  கீழ் அனைத்து, தனியார் பள்ளிகள் மற்றும் தமிழக கல்லூரிகள் கடைபிடிக்க வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரேபிட் கிட் டுபாக்கூர்: அன்றே சொன்ன டாக்டர் வேலுமணி