Webdunia - Bharat's app for daily news and videos

Install App

7.5% உள் ஒதுக்கீடு: சிறிது நேரத்தில் கவர்னரை சந்திக்கின்றார் முதல்வர்

Webdunia
ஞாயிறு, 25 அக்டோபர் 2020 (14:41 IST)
நீட் தேர்வில் வெற்றிபெற்ற மாணவர்களில் 7.5% அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு செய்யப்படும் என்ற மசோதா சமீபத்தில் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது என்பது தெரிந்ததே
 
இந்த மசோதா அமல் செய்யப்பட கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது.இந்த நிலையில் கவர்னர் இன்னும் இது குறித்து முடிவு எடுக்காமல் உள்ளார்.7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு விவகாரத்தில் கவர்னர் உடனடியாக முடிவு எடுக்க வேண்டும் என திமுக உள்பட அரசியல் கட்சிகள் அழுத்தம் தெரிவித்து வருகின்றன, இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
இந்த நிலையில் இன்னும் சில நிமிடங்களில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தமிழக ஆளுநர் பன்வாரிலால் அவர்களை சந்திக்க இருப்பதாகவும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு குறித்து ஆளுநரிடம் அவர் நேரில் பேச இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸ்டாலினின் 50 மாத ஆட்சியில் ரூ.4 லட்சம் கோடி கடன்: எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

போராட்டம் செய்யும் ஆசிரியர்களை கைது செய்வதா? திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்

அரசியல் வாழ்க்கையில் நான் மகிழ்ச்சியாக இல்லை: நடிகை கங்கனா ரனாவத்

உலகின் சிறந்த 250 மருத்துவமனைகள்.. வெறும் மூன்று இந்திய மருத்துவமனைகளுக்கே இடம்..!

திருமணம் செய்து கொள்ள மறுப்பு.. 18 வயது கல்லூரி மாணவி மீது ஆசிட் வீசிய 20 வயது கல்லூரி மாணவர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments