Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எடுத்துக்கிட்ட நேரமே போதும்; இடஒதுக்கீட்டை குடுங்க! – எல்.முருகன் கோரிக்கை

Webdunia
ஞாயிறு, 25 அக்டோபர் 2020 (13:50 IST)
அரசு பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு விவகாரத்தில் விரைவில் ஆளுனர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என பாஜக தமிழக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், ஆளுனர் ஒப்புதல் அளிக்கப்படாமல் இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆளுனர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் “அரசு பள்ளி மாணவ்ர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க ஏற்படுத்தப்பட்ட தீர்மானத்தின் மீது ஆளுனர் தரப்பில் அதிகமாகவே நேரம் எடுத்துக் கொள்ளப்பட்டு விட்டது. எனவே இனியும் தாமதிக்காமல் ஆளுனர் ஒப்புதல் வழங்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் முதுநிலை தேர்வை ஒரே ஷிப்டில் நடத்த வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு..!

பள்ளிகள் திறப்பு ஜூன் 9ஆம் தேதிக்கு தள்ளி போகிறதா? தமிழக அரசு விளக்கம்..!

ரூ.1.28 கோடி சம்பளம் பெற்றவர் இன்று உணவு டெலிவரி பாய்.. காரணம் AI.. அதிர்ச்சி தகவல்..!

தவறு செய்திருந்தால் மன்னிப்பு கேட்பேன், ஆனால்.. கமல்ஹாசன் பேச்சு..!

பிரதமர் மோடியை சந்தித்த 14 வயது வைபவ் சூரியவன்ஷி.. வாழ்த்து தெரிவித்து எக்ஸ் பதிவு.!

அடுத்த கட்டுரையில்
Show comments