Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரோட்டோர டீக்கடையில் காசு கொடுத்து டீ குடித்த முதல்வர்

Webdunia
செவ்வாய், 27 மார்ச் 2018 (14:10 IST)
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் சொந்த தொகுதியான சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொங்கனாபுரம் ஊராட்சி ஒன்றியம் சமுத்திரம் என்ற கிராமத்தில் புதிய ஆரம்ப சுகாதார நிலையத்தை முதல்வர் இன்று தொடங்கி வைத்தார். பின்னர் அவர் சேலம் திரும்பும் வழியில் அந்த கிராமத்தில் உள்ள டீக்கடை ஒன்றின் அருகே திடீரென காரை நிறுத்த சொன்னார் முதல்வர். அந்த டீக்கடையின் பெஞ்சில் உட்கார்ந்து முதல்வர் எடப்பாடி டீ குடித்தார்.

பின்னர் அந்த கடை உரிமையாளரிடம் தேனீர் வியாபாரம் எப்படி உள்ளது என்று விசாரித்துவிட்டு பின்னர் தனக்கும் தன்னுடன் வந்தவர்களுக்கும் கொடுத்த டீக்கு பணம் கொடுத்தார். மேலும் தேனீர் நன்றாக இருந்ததாக கூறி கடை உரிமையாளருக்கு முதல்வர் நன்றி தெரிவித்தார்.

இந்த நிகழ்வின்போது முதல்வருடன் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் எம்.எம்.ஏக்கள், எம்பிக்கள் உடன் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிப்பன் மாளிகையில் பேச்சுவார்த்தை: தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்திற்குத் தீர்வு கிடைக்குமா?

சுதந்திர தினத்தன்று இறைச்சி விற்பனைக்கு தடை.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

14 வயது சகோதரிக்கு ராக்கி கட்டி பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற இளைஞர்: அதிர்ச்சி சம்பவம்!

இன்றிரவு சென்னை உள்பட 8 மாவட்டங்களில் மழை.. வானிலை எச்சரிக்கை..!

மனைவி மீது சத்தியம் செய்யுங்கள்.. கேள்வி கேட்ட எம்.எல்.ஏவுக்கு சவால் விடுத்த அமைச்சர்.. பின்வாங்கிய எம்.எல்.ஏ..!

அடுத்த கட்டுரையில்
Show comments