Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிராமப்புற மாணவர்களுக்கு நீட் தேவை: அண்ணாமலை

Webdunia
வெள்ளி, 16 ஜூலை 2021 (15:38 IST)
கிராமப்புற மாணவர்களுக்கு நீட்தேர்வு அவசியம் என்றும் நீட்தேர்வு வேண்டுமென்பதே பாஜகவின் நிலைப்பாடு என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்
 
தமிழக பாஜக தலைவராக இருந்த எல் முருகன் சமீபத்தில் மத்திய அமைச்சராக பொறுப்பேற்றதால் புதிய தலைவராக அண்ணாமலை அவர்கள் நியமனம் செய்யப்பட்டார். இதனையடுத்து இன்று தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட அண்ணாமலை சற்றுமுன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்
 
அப்போது நீட் தேர்வு என்பது கண்டிப்பாக வேண்டும் என்றும் குறிப்பாக கிராமப்புற மாணவர்களுக்கு நீட் தேவை அவசியம் என்றும் நீட்தேர்வு வேண்டும் என்பதே பாஜகவின் நிலைப்பாடு என்றும் தெரிவித்தார் 
 
நீட்தேர்வு வந்த பின்னர்தான் மருத்துவப் படிப்புகளுக்காக கோடிக்கணக்கில் செலவு செய்வது தடுக்கப்பட்டதாகவும் நீட் தேர்வின் அவசியம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவோம் என்றும் தெரிவித்தார் 
 
மேலும் கடைக்கோடி மனிதனுக்கும் அங்கீகாரம் அளிக்கும் கட்சியாக பாஜக உள்ளது என்றும் 37 வயதில் பாஜக தலைவராக பொறுப்பேற்ற எனக்கு பொறுப்பு அதிகமாக இருப்பதாகவும் அந்த பொறுப்பை எதிர்பார்ப்பிற்கு ஏற்ப செயல்படுவேன் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசியை வழங்குமாறு தமிழக பாஜக பிரதமர் வலியுறுத்தும் என்றும் அனைத்து மாநிலங்களுக்கும் பாரபட்சமில்லாமல் தான் தற்போது மத்திய அரசு தடுப்பூசிகளை வழங்கி வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனி 24 மணி நேரத்திற்கு முன்பே வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட் தெரிந்துவிடும்: ரயில்வே துறை

மகளிர்கள் ஓசியில் பயணம் செய்யுங்கள், ஆண்கள் வீட்டு வேலை செய்யட்டும்: திமுக எம்.எல்.ஏ

சீனாவில் அனைத்து ஏஐ செயலிகளுக்கும் தற்காலிக தடை! காரணம் கேட்டா ஷாக் ஆயிடுவீங்க!

கீழடிக்கு ஆதாரம் கேட்கிறாங்க.. ராமருக்கு என்ன ஆதாரம்? - வைரமுத்துவின் வைரல் கவிதை!

என் அண்ணன் கொலையை வைத்து பிரபலமடைகிறேனா? ராஜா ரகுவம்சி சகோதரி ஆவேசம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments