Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அப்பனே விநாயகா... பிள்ளையாரிடம் தேர்தலுக்கு பிட்டு போட்ட முருகன்!!

Webdunia
சனி, 22 ஆகஸ்ட் 2020 (10:41 IST)
தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடி பாஜகவிற்காக சிறப்பு வேண்டுதல் ஒன்றை வைத்துள்ளார். 
 
கொரோனா காரணமாக விநாயகர் சதுர்த்திக்கு சிலை வைத்து வழிபடுதல், ஊர்வலம் செல்லுதல் போன்றவற்றிற்கு தமிழக அரசு தடை விதித்தது. அரசின் தடைக்கு எதிராக பாஜக, இந்து முன்னணி உள்ளிட்டவை தொடர்ந்து சிலை வைக்க அனுமதி கோரி வந்தன. 
 
இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்றமும் தமிழக அரசின் உத்தரவை பின்பற்ற உத்தரவிட்டது. எனவே எந்த ஆரவாரமும் இன்றி மக்கள் அனைவரும் தங்களது இல்லங்களில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடி வருகின்றனர். 
 
அந்த வகையில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடி, சட்டப்பேரவை தேர்தலில் பாஜக அதிக இடங்களில் வெற்றிபெற விநாயகரிடம் பிரார்த்தனை செய்தேன் என கூறியுள்ளார். 
 
தமிழகத்தில் தாமரை மலரவே மலராது என இருக்கும் நிலையில் முருகன் பிள்ளையாரிடம் வெற்றி பெற கோரியுள்ளது சமூக வலைதளத்தில் கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments