Publish Date: Mon, 21 Jun 2021 (10:36 IST)
Updated Date: Mon, 21 Jun 2021 (10:37 IST)
சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஆளுநர் பன்வாரிலால் உரையுடன் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது.
ஆம், தமிழ்நாட்டின் 16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் துவங்கியது. இது முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல் கூட்டத்தொடராகும்.
ஆளுநர் பன்வாரிலால் புரோகித், எளிமையான வாழ்க்கையை வாழுங்கள் இது ஊழலை அகற்றிவிடும். மாநிலங்களுக்கு சுயாட்சி என்ற இலக்கை எட்ட அரசு உறுதியாக உள்ளது. தனக்கு வாக்களித்தோர் வாக்களிக்காதோர் என பாராபட்சம் இன்றி இந்த அரசு செயல்படும் என கூறி உரையை தொடங்கினார்.