Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருவண்ணாமலை தேரோட்டத்தின்போது விபரீதம்: மின்சாரம் பாய்ந்ததால் பரபரப்பு

Webdunia
வியாழன், 23 நவம்பர் 2023 (18:47 IST)
மிகவும் புகழ்பெற்ற திருவண்ணாமலை தேரோட்டம் இன்று நடைபெற்ற போது திடீரென பக்தர்கள் மீது மின்சாரம் பாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 
 
ஒவ்வொரு ஆண்டும் திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திற்கு முன்பு தேரோட்டம் நடைபெறும் என்பதும் இந்த தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் இன்று திருவண்ணாமலை தேரோட்டம் நடந்த போது திடீரென தேரின் அருகில் இருந்த கடையிலிருந்து மின்சாரம் பாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து பக்தர்கள் சிலர் மீது மின்சாரம் பாய்ந்ததால் காயம் ஏற்பட்டதாகவும் இது குறித்து தகவல் அடைந்த காவல்துறையினர் உடனடியாக மின்சாரத்தை நிறுத்தி பக்தர்களை மீட்டதாகவும் தெரிகிறது. 
 
இந்த நிலையில் காயமடைந்த பக்தர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் யாருக்கும் ஆபத்து இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முத்தமிட்டால் உயிர்க்கொல்லி காய்ச்சல் பரவுமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

அண்ணாமலை நன்றாக படிச்சிட்டு வரட்டும்.. வாழ்த்துக்கள்: செல்லூர் ராஜூ

கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழப்பு.. ஆன்மீக வழிபாடு நிகழ்ச்சியில் பயங்கரம்..!

பானிபூரி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!

மீனவர் பிரச்சனை குறித்து முதல்வர் ஸ்டாலின் மீண்டும் கடிதம்..! கண்டுகொள்ளாத மத்திய அரசு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments