Webdunia - Bharat's app for daily news and videos

Install App

Deep Fake தொழில்நுட்பத்தை பயன்படுத்த புதிய விதிமுறைகள்: அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

Webdunia
வியாழன், 23 நவம்பர் 2023 (18:20 IST)
Deep Fake தொழில்நுட்பம் என்பது ஒரு பெரிய பிரச்சினையாக மாறிவரும் நிலையில் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்த புதிய விதிமுறைகள் ஒரு வாரத்தில் முறைப்படுத்தப்படும் என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்  தெரிவித்துள்ளார். 
 
சமீபத்தில் ராஷ்மிகா மந்தனாவின்  Deep Fake செய்யப்பட்ட வீடியோ வெளியாகி மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில்  Deep Fake  தொழில்நுட்பம் தற்போது சமூகத்திற்கு தீவிர அச்சுறுத்தலாக இருப்பதாகவும் அதற்கு எதிராக விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டது.  
 
இந்த நிலையில் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்  அவர்கள் இது குறித்து கூறிய போது Deep Fake தொழில்நுட்ப மூலம் உருவாக்கப்படும் போலி வீடியோக்களை கண்டறிதல், அவற்றை தடுத்தல், புகார் அளித்தல், விழிப்புணர்வை ஏற்படுத்துதல் ஆகிய நான்கு கோணங்களில் கவனம் செலுத்த போவதாகவும் இந்த தொழில்நுட்பத்தை முறைப்படுத்துவது தொடர்பாக புதிய விதிமுறைகள் ஒரு வாரத்தில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகத்தில் இங்கு 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை..!

அனைத்து எம்.எல்.ஏக்கள் எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்.! எதற்காக தெரியுமா.?

தங்கத்தைவிட மதிப்புமிக்க மரத்தை குறிவைக்கும் கொள்ளையர்கள் - பீதியில் விவசாயிகள்

ஒரே மேடையில் அண்ணாமலை, டிடிவி, ஓபிஎஸ்.. களை கட்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..!

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments