Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திருவண்ணாமலையில் நாளை மகாதீபம்.. பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்..!

திருவண்ணாமலையில் நாளை மகாதீபம்.. பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்..!
, சனி, 25 நவம்பர் 2023 (13:08 IST)
திருவண்ணாமலையில் நாளை மகா தீபம் ஏற்றப்பட உள்ளதை அடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன 
 
திருவண்ணாமலையில் தற்போது கார்த்திகை தீப திருவிழா நடைபெற்று வரும் நிலையில்  நேற்று முன்தினம் மகா தேரோட்டம் நடந்தது. இந்த நிலையில் கார்த்திகை தீப திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகா தீபம் நாளை ஏற்றப்பட உள்ளதை அடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. 
 
நாளை அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட இருப்பதாகவும் இதை காண லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது.  
 
மோட்ச தீபம் என்று அழைக்கப்படும் இந்த மகா தீபம் ஏற்றியவுடன் அண்ணாமலையின் உச்சியில் ஜோதி வடிவமாக அண்ணாமலையார் காட்சி அளிப்பார். இந்த மகா தீப தரிசனத்தை 11 நாட்கள் காணலாம் என்பதும்  குறிப்பிடத்தக்கது.  
 
மேலும் கார்த்திகை மாத பௌர்ணமி வரும் 26 ஆம் தேதி என்பதால், அன்றைய நாள் பௌர்ணமி கிரிவலம் செல்லும் பக்தர்களும் வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதானி-ஹிண்டர்பெர்க் வழக்கு: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் சரமாரியாக கேள்வி..!