Publish Date: Thu, 16 Dec 2021 (19:11 IST)
Updated Date: Thu, 16 Dec 2021 (19:45 IST)
கேரளாவில் பறவைக் காய்ச்சல் அதிகரித்து வரும் நிலையில் தமிழக எல்லை மாவட்டங்களில் தடுப்புப் பணிகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன.
கேரளாவின் ஆலப்புழா உள்ளிட்ட மாவட்டங்களில் பறவைக்காய்ச்சல் பாதிப்பு அதிகமாகியுள்ளது. இந்நிலையில் தமிழக கேரள எல்லையில் இருக்கும் நீலகிரி மாவட்டத்தில் தடுப்புப் பணிகள் அதிகமாக்கப்பட்டுள்ளன. எல்லை பகுதியில் இருக்கும் சோதனை சாவடிகளில் வாகனங்கள் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு அதன் பின்னரே அனுமதிக்கப்படுகின்றன.