Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திருவண்ணாமலை தீபத் திருவிழா: தாம்பரத்தில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கம்!

Advertiesment
Thiruvannamalai deepam festival

Prasanth Karthick

, புதன், 11 டிசம்பர் 2024 (17:51 IST)

திருவண்ணாமலையில் நடைபெறும் தீபத்திருவிழாவிற்கு செல்ல பக்தர்கள் வசதிக்காக தாம்பரத்தில் இருந்து 3 நார்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

 

 

வரும் வெள்ளிக்கிழமை திருக்கார்த்திகை கொண்டாடப்படும் நிலையில் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலை தீபத்தை காண செல்வார்கள் என்பதால் சிறப்பு பேருந்துகள், ரயில்கள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

அந்த வகையில் சென்னை, தாம்பரம் மக்கள் சென்று வர தாம்பரத்தில் இருந்து டிசம்பர் 13, 14 மற்றும் 15 ஆகிய மூன்று தினங்களுக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. காலை 10.45 மணிக்கு தாம்பரத்தில் புறப்படும் சிறப்பு ரயில் செங்கல்பட்டு, திண்டிவனம், விழுப்புரம், திருக்கோவிலூர் வழியாக மதியம் 2.45க்கு திருவண்ணாமலை சென்றடையும்

 

மறுமார்க்கமாக இரவு 10.25க்கு திருவண்ணாமலையில் புறப்படும் சிறப்பு ரயில் நள்ளிரவு 2.15 மணியளவில் தாம்பரம் வந்தடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

2 ஆயிரம் கடனுக்காக மனைவியை ஆபாசமாக சித்தரித்த லோன் ஏஜெண்ட்! - விரக்தியில் கணவன் தற்கொலை!