Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஏ.டி.எம். மையங்களில் கொள்ளையடித்தவர்கள் வட இந்தியர்களா? அரியானா விரையும் போலீஸ்..!

atm
, திங்கள், 13 பிப்ரவரி 2023 (10:05 IST)
ஏ.டி.எம். மையங்களில் கொள்ளையடித்தவர்கள் வட இந்தியர்களா? அரியானா விரையும் போலீஸ்..!
திருவண்ணாமலையில் நேற்று அடுத்தடுத்து நான்கு ஏடிஎம்களில் மர்ம நபர்கள் கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் முதல் கட்ட விசாரணையில் இந்த ஏடிஎம்களில் கொள்ளை அடித்தவர்கள் வட இந்தியர்கள் என்றும் குறிப்பாக அரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது. 
 
இதனை அடுத்து அரியானா மாநிலத்திற்கு இரண்டு தனிப்படைகள்  விரைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. கடந்த மூன்றாம் தேதி கோலார் தங்க வயலில் ஏடிஎம் மையத்தில் நடைபெற்ற கொள்ளைக்கும் திருவண்ணாமலை ஏடிஎம் நடந்த கொள்ளைக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகப்படுவதாகவும் கூறப்படுகிறது.
 
ஹரியானா சென்றுள்ள இரண்டு தனிப்படைகள் அங்கு விசாரணை செய்து கொள்ளையர்கள் யார் என்பது குறித்து புலன் விசாரணை செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வாரத்தின் முதல் நாளே சரிந்த சென்செக்ஸ்.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!