Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பரங்குன்றத்தில் தீபத்திருவிழா; தேரோட்டம்! – இன்று கொடியேற்றம்!

Webdunia
திங்கள், 28 நவம்பர் 2022 (08:58 IST)
திருப்பரங்குன்றத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் கார்த்திகை தீபத்திருவிழாவிற்கான கொடியேற்றம் இன்று தொடங்குகிறது.

முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபத்திருவிழா தொடங்கி 10 நாட்கள் கோலாகலமாக நடைபெற உள்ளது. இன்று தொடங்கி டிசம்பர் 7 வரை நடைபெறும் இந்த திருவிழாவில் பல்வேறு சிறப்பு நிகழ்வுகள், பூஜைகள் நடைபெற உள்ளன.

இன்று மதியம் 12.15 மணிக்கு மேல் திருவிழாவுக்கான கொடியேற்றம் நடைபெற உள்ளது. திருவிழா நாட்களில் தினமும் காலை தங்க சப்பரத்திலும், இரவில் வெள்ளி பூத வாகனம், மயில் வாகனம், குதிரை வாகனம் என பல வகை வாகனங்களிலும் முருகன், தெய்வானை சகிதமாக எழுந்தருள்வார்.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக டிசம்பர் 5ம் தேதி ஆறுகால் மண்டபத்தில் பட்டாபிஷேகமும், 6ம் தேதி சிறிய தேரோட்டமும், மாலை மலையில் மகாதீபமும் ஏற்றப்படுகிறது. நிறைவு விழாவாக 7ம் தேதி தீர்த்த உற்சவம் நடைபெறுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக தேரோட்டத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்படாத நிலையில் தற்போது அதிகமானோர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

5 ரூபாய் லஞ்சம் வாங்கிய கணினி ஆபரேட்டர் .! இந்த வினோத சம்பவம் எங்கு தெரியுமா.?

காற்றாலை திட்டத்திற்கு எதிர்ப்பு.! அதானி நிறுவனத்திற்கு எதிராக இலங்கையில் வழக்கு!!

சிறுவன் உயிரிழந்ததன் எதிரொலி.! வனத்துறை வசம் செல்கிறது குற்றால அருவிகள்..!!

புது உச்சத்தை நோக்கி தங்கம் விலை.. ரூ.55000ஐ நெருங்கியது ஒரு சவரன் விலை..!

ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!

அடுத்த கட்டுரையில்
Show comments