Publish Date: Mon, 28 Nov 2022 (07:59 IST)
Updated Date: Mon, 28 Nov 2022 (08:02 IST)
தமிழக அரசு சட்டமன்றத்தில் இயற்றிய ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் காலாவதி ஆனது. இதனையடுத்து தமிழக அரசின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து மக்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டம் காரணமாக பல லட்சக்கணக்கான ரூபாயை இழந்து வருவதோடு பல தற்கொலைகள் நிகழ்ந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை அடுத்து அனைத்து கட்சிகளும் வலியுறுத்தி அடுத்த மாதம் 19ஆம் தேதி தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்யும் அவசர சட்டம் இயற்றப்பட்டது
இந்த சட்டம் தமிழக ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று வரை தமிழக ஆளுநர் இந்த மசோதாவில் கையெழுத்திடவில்லை
இதனையடுத்து இன்று இந்த சட்டம் காலாவதியானதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனை அடுத்து தமிழக அரசு அடுத்த கட்ட நடவடிக்கை என்ன எடுக்கப்படுகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.