Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காலாவதியானது ஆன்லைன் சூதாட்ட தடைக்கான அவசர சட்டம்: தமிழக அரசின் நடவடிக்கை என்ன?

காலாவதியானது ஆன்லைன் சூதாட்ட தடைக்கான அவசர சட்டம்: தமிழக அரசின் நடவடிக்கை என்ன?
, திங்கள், 28 நவம்பர் 2022 (07:59 IST)
தமிழக அரசு சட்டமன்றத்தில் இயற்றிய ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் காலாவதி ஆனது. இதனையடுத்து தமிழக அரசின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து மக்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். 
 
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டம் காரணமாக பல லட்சக்கணக்கான ரூபாயை இழந்து வருவதோடு பல தற்கொலைகள் நிகழ்ந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
 
இதனை அடுத்து அனைத்து கட்சிகளும் வலியுறுத்தி அடுத்த மாதம் 19ஆம் தேதி தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்யும் அவசர சட்டம் இயற்றப்பட்டது 
 
இந்த சட்டம் தமிழக ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று வரை தமிழக ஆளுநர் இந்த மசோதாவில் கையெழுத்திடவில்லை 
 
இதனையடுத்து இன்று இந்த சட்டம் காலாவதியானதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனை அடுத்து தமிழக அரசு அடுத்த கட்ட நடவடிக்கை என்ன எடுக்கப்படுகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலை எவ்வளவு?