Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நெல்லை-மேட்டுப்பாளையம் இடையே வாராந்திர எக்ஸ்பிரஸ்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு

Train
, சனி, 27 ஆகஸ்ட் 2022 (19:09 IST)
திருநெல்வேலி மற்றும் மேட்டுப்பாளையம் இடையே வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
 
திருநெல்வேலி-மேட்டுப்பாளையம்(06030) இடையே வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற செப்டம்பர் 1-ந்தேதி முதல் ஜனவரி 26-ந்தேதி வரை இயக்கப்படும். இரவு 7 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்படும் ரெயில் மறுநாள் காலை 7.30 மணிக்கு மேட்டுப்பாளையம் சென்றடையும். 
 
மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி(06029) இடையே வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற செப்டம்பர் 2-ந்தேதி முதல் ஜனவரி 27-ந்தேதி வரை இயக்கப்படும். இரவு 7.45 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்படும் ரெயில் மறுநாள் காலை 7.45 மணிக்கு திருநெல்வெலி சென்றடையும். 
 
திருநெல்வேலி-தாம்பரம்(06004) இடையே இயக்கப்படும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் திருநெல்வேலி-விருதுநகர் இடையே செல்லும் நேரம் வருகிற ஆகஸ்டு 28-ந்தேதி முதல் மாற்றப்படுகிறது. திருநெல்வேலியில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்படும் நேரம் 7.20 மணிக்கு மாற்றம்செய்யப்படுகிறது. இதேபோல் விருதுநகர் வரை ரெயில் செல்லும் நேரங்களில் மாற்றம் செய்யப்படுகிறது.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

''தமிழக பாஜகவிற்கு இரண்டு தலைவர்கள்'' - கே.எஸ். அழகிரி கிண்டல்!