Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திருக்குறளைத் தேசிய நூலாக்க வேண்டும்: டிடிவி தினகரன் கோரிக்கை

dinakaran
, திங்கள், 16 ஜனவரி 2023 (16:18 IST)
இன்று தமிழக முழுவதும் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் கூறியுள்ளார்
 
இது குறித்து அவர் பதிவு செய்துள்ள டு வீட்டில் கூறியிருப்பதாவது: ஒட்டுமொத்த உலகத்திற்கும் பொதுமறை என்று சொல்லத்தக்க வகையில் அனைத்தையும் உள்ளடக்கிய திருக்குறளைத் தந்திட்ட திருவள்ளுவரின் தினமாக இன்றைய நாளை கொண்டாடுகிறோம். 
 
திருக்குறள் காட்டும் உயர்ந்த நெறிகளோடு நாம் ஒவ்வொருவரும் நம்முடைய வாழ்வினை அமைத்துக்கொள்வோம். முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் கோரிக்கையான திருக்குறளைத் தேசிய நூலாக்க வேண்டும் என்ற நம்முடைய நெடுநாள் எண்ணத்தை நனவாக்க இந்நாளில் உறுதி ஏற்போம்" என்று கூறியுள்ளார்.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திருச்சி, சூரியூர் ஜல்லிக்கட்டு: காளை முட்டியதில் பார்வையாளர் உயிரிழப்பு