Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இன்று இரவு 19 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை: வானிலை அறிவிப்பு..!

Advertiesment
Rain

Mahendran

, திங்கள், 12 மே 2025 (16:38 IST)
இன்று இரவு தமிழகத்தில் உள்ள 19 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஒரு பக்கம் கோடை வெயில் கொளுத்தி வந்தாலும், இன்னொரு பக்கம் சில பகுதிகளில் மட்டும் மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
 
அந்த வகையில் இன்று தமிழகம், புதுவை, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
குறிப்பாக திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு மற்றும் நீலகிரி மாவட்டங்களில் இடையே மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும்.
 
அதேபோல் திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, சென்னை, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
 Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ராணுவ வீரர்களின் சொத்துக்களுக்கு வரி இல்லை: துணை முதல்வர் பவன் கல்யாண் அறிவிப்பு..!