Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்முனை தாக்குதலில் தினகரன்: போட்டியிடுவதை கைவிடுவாரா?

Webdunia
வெள்ளி, 15 மார்ச் 2019 (19:31 IST)
வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட அதிமுக, திமுக கூட்டணிகள் ஜெட் வேகத்தில் சென்று கொண்டிருக்கும் நிலையில் டிடிவி தினகரனின் அமமுக கூட்டணி ஆமை வேகத்தில் கூட செல்லவில்லை. 39 தொகுதிகளிலும் தனித்து போட்டி என்று அறிவித்தாலும் இன்னும் விருப்பனு அளித்தல் உள்பட எந்தவித ஆரம்பகட்ட பணியும் நடைபெறுவதாக தெரியவில்லை
 
இந்த நிலையில் தினகரன் கட்சிக்கு குக்கர் சின்னம் கிடைக்காமல் இருக்க தேர்தல் ஆணையம் சதி செய்வதாக அவரது தரப்பினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். இதுகுறித்த வழக்கு ஒன்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆஜராகாததால் மார்ச் 25ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அன்றுதான் அமமுகவுக்கு குக்கர் சின்னம் கிடைக்குமா? இல்லையா? என்பது தெரியும். ஆனால் அதற்கு அடுத்த நாள் மார்ச் 26ஆம் தேதிதான் வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி தேதி என்பது குறிப்பிடத்தக்கது.
 
மேலும் இந்த் தேர்தலில் தினகரன் கட்சி போட்டியிட வேண்டாம் என்று அறிவுறுத்துமாறு சிறையில் உள்ள சசிகலாவை சந்தித்து பாஜக பிரமுகர் ஒருவர் கூறியுள்ளதாகவும் இதனை சசிகலா, தினகரனின் கூற அதற்கு தினகரன் ஒப்புக்கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது
 
அதேபோல் தினகரன் கட்சியில் உள்ள முக்கியமானவர்களுக்கு அதிமுக தலைமை வலைவிரித்து வருவதாகவும் தேர்தலுக்கு முன் அதிமுகவுக்கு வருபவர்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படும் என்ற ஆசை வார்த்தைகள் தரப்படுவதாகவும் செய்திகள்
கூறுகின்றன.
 
எனவே தேர்தல் ஆணையம், பாஜக, அதிமுக என மும்முனைகளில் இருந்து வரும் தாக்குதல்களை தினகரன் எப்படி சமாளிக்க போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments