Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கனியாமூர் பள்ளி கலவரம்: மேலும் 3 பேர் கைது!

kaniyamur violence
, திங்கள், 15 ஆகஸ்ட் 2022 (08:36 IST)
கனியாமூர் பள்ளி கலவரம்: மேலும் 3 பேர் கைது!
கள்ளக்குறிச்சி அருகே கனியாமூர் என்ற பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கலவரம் நடந்த நிலையில் இந்த கலவரத்தில் ஈடுபட்டதாக ஏற்கனவே பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்
 
இந்த நிலையில் இது குறித்து வெளியான வீடியோ அடிப்படையில் மேலும் 3 பேரை கலவரம் செய்ததாக காவல் துறையினர் கைது செய்துள்ளனர்
 
கலவரம் நடைபெற்றபோது அந்த பள்ளி வளாகத்தில் மாட்டுப்பண்ணை பொறுப்பாளரை மிரட்டி மாடுகளை எடுத்துச் சென்றதாக சின்ன சேலத்தை சேர்ந்த பூவரசன், மணிகண்டன் மற்றும் ஆதிசக்தி ஆகிய மூவரைத் வீடியோ ஆதாரங்கள் மூலம் போலீசார் கண்டுபிடித்து கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
கைது செய்யப்பட்ட மூவரின் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியேற்றினார் பிரதமர் மோடி: பாரதியாரை நினைவு கூர்ந்து உரை!