Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தைப்பூசத்தை முன்னிட்டு நாளை முதல் 3 நாட்களுக்கு சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 3 பிப்ரவரி 2023 (15:46 IST)
தைப்பூச திருநாளை முன்னிட்டு அரக்கோணம் முதல் திருத்தணி வரை மூன்று நாட்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 
 
நாளை மறுநாள் அனைத்து முருகன் கோயில்களிலும் தைப்பூச திருவிழா சிறப்பாக கொண்டாட இருக்கிறது. முருகனின் அறுபடை வீடுகளிலும் பக்தர்கள் ஏராளமாக குவிந்து வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
இந்த நிலையில் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணிக்கு நாளை முதல் மூன்று நாட்களுக்கு அரக்கோணத்தில் இருந்து சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
 
தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் இருந்து அரக்கோணம் வரும் பக்தர்கள் அரக்கோணத்தில் இருந்து இந்த சிறப்பு ரயில் மூலம் திருத்தணிக்கு செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலை தைப்பூச திருவிழாவுக்கு திருத்தணி வரும் பக்தர்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உளவுத்துறை பெண் அதிகாரி மர்ம மரணம்.. தண்டவாளத்தில் இருந்த பிணம்..!

9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!

திகார் சிறையை மாற்ற முடிவு.. டெல்லி முதல்வர் அறிவிப்பு..!

கவர்னரை புகழ்ந்து பேசுவது தவறு இல்லையா? நடிகர் பார்த்திபனுக்கு விசிக கண்டனம்..!

ஈபிஎஸ் யாரை பார்க்க செல்கிறார் என்பது எனக்கு தெரியும்: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments