Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈரோடு இடைத்தேர்தலில் மத்திய ஆயுதப்படை போலீஸார் பாதுகாப்பு-தலைமை தேர்தல் அதிகாரி

Webdunia
வெள்ளி, 3 பிப்ரவரி 2023 (15:41 IST)
ஈரோடு இடைத்தேர்தலில் 2 கம்பெனி மத்திய ஆயுதப்படை போலீஸார் பாதுகாப்பில் ஈடுபடுபடுத்தப்படுவர் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் எம்.எல்.ஏவாக இருந்த திருமகன் ஈவேரா உயிரிழந்த நிலையில் அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கப்பட்டுள்ள நிலையில் பிரபலமான கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன.

இதில், காங்கிரஸ் சார்பில் மறைந்த  ஈவேரா திருமகனின் தந்தை ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதேபோல், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா, ஓபிஎஸ் அணி சார்பில் செந்தில் இன்று வேட்பு மனுதாக்கல் செய்தார்.

பலமுனை போட்டி நிலவுவதால், ஈரோடு இடைத்தேர்தலில் 2 கம்பெனி மத்திய ஆயுதப்படை போலீஸார் பாதுகாப்பில் ஈடுபடுவர் என்ற தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments