Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இது தீர்ப்பு மாதிரி இல்ல.. தீர்மானம் பண்ணுன மாதிரி இருக்கு! – திருமாவளவன் சந்தேகம்!

Webdunia
புதன், 30 செப்டம்பர் 2020 (13:42 IST)
பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு முன்கூட்டியே திட்டமிடப்பட்டது போல உள்ளதாக வி.சி.க தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.

1992ம் ஆண்டில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதன் மீதான வழக்கில் சம்பந்தப்பட்ட 32 பேருக்கு இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த சிபிஐ நீதிமன்றம் பாபர் மசூதி மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தியதற்கான ஆதாரங்கள், சாட்சிகள் இல்லாததால் 32 பேரையும் விடுவிப்பதாக உத்தரவிட்டுள்ளது.

சிபிஐ நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு குறித்து ஆதரவுகளும், எதிர்ப்புகளும் எழ தொடங்கியுள்ளன. இந்நிலையில் இந்த தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள வி.சி.க தலைவர் திருமாவளவன் ” ஏற்கனவே தீர்மானித்ததையே தீர்ப்பாக வழங்கியுள்ளனர் என்னும் அய்யம் எழுகிறது.இது தீர்ப்பு என்பதைவிட தீர்மானிப்பு என்பதேசரி.பாபர்மசூதியை இடித்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரும் நிராபராதிகளென அவர்களை விடுதலைசெய்த சிபிஐ மீதான நம்பகத்தன்மை தகர்ந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உயர் ரக சிகிச்சை தேவைப்படுவோர் தனியார் மருத்துவமனைக்கு செல்லுங்கள்: அமைச்சரின் சர்ச்சை பேச்சு

ராய்ட்டர்ஸ் உள்பட 2,355 கணக்குகளை இந்திய அரசு முடக்க சொன்னது: எக்ஸ் அதிர்ச்சி தகவல்..!

திமுகவிடம் மதிமுக 25 தொகுதிகள் கேட்கிறதா? வைகோ விளக்கம்..!

கோவில் கும்பாபிஷேகம் ஒன்றும் அரசியல் நிகழ்ச்சி அல்ல.. செல்வப்பெருந்தகைக்கு பாஜக கண்டனம்..!

பேய் ஓட்டுவதாக கூறி 6 மணி நேரம் தாயை அடிக்க வைத்த மகன்.. அதன்பின் நடந்த விபரீதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments