Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உதயநிதிக்கு வயசுக்கு மீறிய பேச்சு... ஜெயகுமார் ஆதங்கம்!

Webdunia
புதன், 30 செப்டம்பர் 2020 (13:36 IST)
உதயநிதி வயதுக்கு மீறிய விமர்சனம் செய்கிறார் என அமைச்சர் ஜெயக்குமார் சமீபத்திய பேட்டியில் பேச்சு. 
 
திமுக இளைஞர் அணி செயளாலர் ஆக பொருப்பேற்ற ஒரு ஆண்டுக்கும் மேலாக பணிபுரிந்து வரும் உதயநிதி ஸ்டாலின், இந்த லாக்டவுன் காலத்தில் அரசியல் நடவடிக்கைகளில் ஆக்டிவாக இருந்து வருகிறார். சினிமவை ஓரம்கட்டிவிட்டு இப்போது அரசியலே பிரதானம் என இருந்து வருகிறார். 
 
இவர் அடிக்கடி தனது சமூக வலைத்தள பக்கமாக டிவிட்டரில் அதிமுகவை பகிரங்கமாக விமர்சித்து வருகிறார். சமீபத்தில் கூட இருவர் முதல்வர் வேட்பாளருக்கு போட்டிப் போட்டுக்கொள்கின்றனர். இவர்கள் இருவரும் போட்டிப்போட்டுக்கொண்டாலும் திடீரென இருவரும் இணைந்து பாஜக உறுப்பினரை கூட முதல்வர் வேட்பாளராக தேர்வு செய்து அறிவிக்க வாப்புள்ளது என விமர்சித்தார். 
 
இந்நிலையில் அமைச்சர் ஜெயகுமார், உதயநிதி ஸ்டாலின் வயதுக்கு மீறிய விமர்சனம் செய்கிறார். அரசியல் பண்பாடு தெரியாமல் தரக்குறைவாக பேசுகிறார் என விமர்சித்துள்ளார். இதற்கு முன்னர் இருவரும் சாக்லெட் பாய், ப்ளே பாய் என பரஸ்பரம் கிண்டல் அடித்துக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

ரூ.4 கோடி கைப்பற்றப்பட்ட விவகாரம்.! நயினார் நாகேந்திரனுக்கு முக்கிய சம்மன்.!

ராமர் கோயில் விழாவை புறக்கணித்த காங்கிரஸை மக்கள் புறக்கணிக்க வேண்டும்: பிரதமர் மோடி

பணி செய்யவிடாமல் தடுத்ததாக வழக்கு. எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு முன் ஜாமீன்..!

பரம்பரை சொத்துக்களுக்கு வரி..! காங்கிரஸின் ஆபத்தான உள்நோக்கங்கள்..! பிரதமர் மோடி..!!

பொய்களை கூறி கண்ணியத்தை குறைத்துக் கொள்ளக்கூடாது..! ராஜ்நாத் சிங்கிற்கு, ப.சிதம்பரம் அறிவுரை..!

அடுத்த கட்டுரையில்
Show comments