Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தை வாட்ட காத்திருக்கும் கோடை! – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

Webdunia
ஞாயிறு, 28 பிப்ரவரி 2021 (12:06 IST)
மார்ச் மாதம் முதலாக தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்க உள்ள நிலையில் பல மாவட்டங்களில் வழக்கத்திற்கு அதிகமான வெப்பம் நிலவும் எனவும் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பருவமழை காலம் முடிந்து குளிர்காலம் நடந்து வரும் நிலையில் மார்ச் மாதத்தை தொடர்ந்து கோடைக்காலம் தொடங்க உள்ளது. ஆண்டுதோறும் கோடைக்காலங்களில் முக்கிய நகர பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் தமிழகத்தின் சில மாவட்டங்களில் வெயில் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, மதுரை, திருச்சி, சேலம், வேலூர், நாமக்கல், திருவள்ளூர், கரூர், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் வழக்கத்தைவிட 3 டிகிரி வரை வெப்பம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவை துண்டு துண்டாக உடைப்பேன்: மிரட்டிய பாகிஸ்தான் தீவிரவாதி மர்ம மரணம்..!

ஜோதியை அடுத்து இன்னொரு யூடியூபர் கைது.. பாகிஸ்தானுக்கு உளவு சொன்னாரா?

2000 ரூபாய் நோட்டுக்கள் போல் 500 ரூபாயும் திரும்ப பெறப்படுமா? டிஜிட்டலுக்கு மாற வலியுறுத்தல்..!

முதல்வர் ஸ்டாலினை அடுத்து மதுரைக்கு வரும் அமித்ஷா.. பாஜக நிர்வாகிகளை சந்திக்க திட்டம்..!

பள்ளிகளில் முகக்கவசம் அணிவதற்கு உத்தரவிடப்படுமா? அமைச்சர் அன்பில் மகேஷ்

அடுத்த கட்டுரையில்
Show comments