Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூன்றாவது முறையாக கொளத்தூரில் களம் இறங்கும் ஸ்டாலின் – விருப்ப மனு தாக்கல்

Webdunia
ஞாயிறு, 28 பிப்ரவரி 2021 (11:45 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் திமுக சார்பில் கொளத்தூரில் போட்டியிட மு.க.ஸ்டாலின் விருப்ப மனு அளித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் அரசியல் கட்சிகல் கூட்டணி மற்றும் விருப்ப மனு பெறுதல் போன்றவற்றில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் திமுகவில் விருப்பமனுக்கள் பெற கடைசி நாள் இன்றுடன் முடிவடைகிறது.

இந்நிலையில் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட மு.க.ஸ்டாலின் விருப்ப மனு அளித்துள்ளார். முன்னதாக 2011,2016 தேர்தல்களிலும் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்று தொடர்ந்து எம்.எல்.ஏவாக இருந்து வரும் நிலையில் மூன்றாவது முறையாக மீண்டும் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments