Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழப்பு -மழைக்கு பலியாகும் உயிர்கள்

Webdunia
வெள்ளி, 3 நவம்பர் 2017 (14:03 IST)
திருவாருர் அருகே அறுந்த கிடந்த மின்சார கம்பியை மிதித்து விவசாயி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
சென்னை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் தற்போது கனமழை பெய்து வருகிறது. 
 
சமீபத்தில் கொடுங்கையூரில் இரு சிறுமிகள் தெருவில் அறுந்து கிடந்த மின்சார கம்பிகளை மிதித்து பரிதாபமாக உயிரிழந்தனர். இது சென்னை வாசிகளுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 
 
அவர்களுக்கு அரசு ரூ.3 லட்சத்தை இழப்பீடாக அளித்துள்ளது. ஆனால், ரூ.10 லட்சம் இழப்பீடாக கொடுக்க வேண்டும் என நீதிமன்றம் தற்போது உத்தரவிட்டுள்ளது. அதேபோல், இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெறாது என அமைச்சர் வேலுமணி கூறியிருந்தார். 
 
இந்நிலையில், மீண்டும் அதே போன்ற சம்பவம் திருவாரூர் அருகே நடந்துள்ளது. 
 
திருவாரூருக்கு அருகே உள்ள மணலகரத்தில் கலியபெருமாள்(65) என்ற விவசாயி, தனது வயலில் சம்பா பயிரில் தேங்கியிருந்த மழை நீரை அகற்ற சென்ற போது அறுந்து கிடந்த மின்சார கம்பியை மிதித்து தற்போது பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
 
சாலையில் அறுந்து கிடக்கும் மின்சார கம்பியை மிதித்து தொடர்ச்சியாக உயிர்கள் பலியாகி வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு வாரத்திற்கு முன் அம்மா மரணம்.. நேற்று விமான விபத்தில் அப்பா மரணம்.. லண்டனில் தவிக்கும் மகள்கள்..!

விமான விபத்தில் பலியான நர்ஸை விமர்சித்த தாசில்தார்.. சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை..!

சிற்றுண்டி சாப்பிட்ட 30 மாணவிகளுக்கு உடல்நலக்குறைவு: பட்டுக்கோட்டையில் பரபரப்பு..!

நிலத்தை அபகரித்துக் கொண்டு மிரட்டுகிறார்கள்! திமுகவை சேர்ந்த வழக்கறிஞர் மீது புகார்!

இது ஆரம்பம்தான்.. இன்னும் நிறைய விமானங்கள் விபத்தாகும்..? - போயிங் குறைபாடு குறித்து எச்சரித்த பொறியாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments