Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழப்பு -மழைக்கு பலியாகும் உயிர்கள்

Webdunia
வெள்ளி, 3 நவம்பர் 2017 (14:03 IST)
திருவாருர் அருகே அறுந்த கிடந்த மின்சார கம்பியை மிதித்து விவசாயி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
சென்னை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் தற்போது கனமழை பெய்து வருகிறது. 
 
சமீபத்தில் கொடுங்கையூரில் இரு சிறுமிகள் தெருவில் அறுந்து கிடந்த மின்சார கம்பிகளை மிதித்து பரிதாபமாக உயிரிழந்தனர். இது சென்னை வாசிகளுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 
 
அவர்களுக்கு அரசு ரூ.3 லட்சத்தை இழப்பீடாக அளித்துள்ளது. ஆனால், ரூ.10 லட்சம் இழப்பீடாக கொடுக்க வேண்டும் என நீதிமன்றம் தற்போது உத்தரவிட்டுள்ளது. அதேபோல், இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெறாது என அமைச்சர் வேலுமணி கூறியிருந்தார். 
 
இந்நிலையில், மீண்டும் அதே போன்ற சம்பவம் திருவாரூர் அருகே நடந்துள்ளது. 
 
திருவாரூருக்கு அருகே உள்ள மணலகரத்தில் கலியபெருமாள்(65) என்ற விவசாயி, தனது வயலில் சம்பா பயிரில் தேங்கியிருந்த மழை நீரை அகற்ற சென்ற போது அறுந்து கிடந்த மின்சார கம்பியை மிதித்து தற்போது பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
 
சாலையில் அறுந்து கிடக்கும் மின்சார கம்பியை மிதித்து தொடர்ச்சியாக உயிர்கள் பலியாகி வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செப்டம்பர் 1 முதல் பதிவு அஞ்சல் சேவை நீக்கம்: அஞ்சல் துறையில் புதிய விதி அமல்

திருநங்கையை உடன் பிறந்த தம்பியே கொலை செய்ய முயற்சி: திண்டுக்கல் அருகே அதிர்ச்சி சம்பவம்..!

பாஜகவுக்காக வாக்கு திருடும் தேர்தல் ஆணையம்.. யாரையும் விடமாட்டோம்: ராகுல் காந்தி ஆவேசம்..!

தமிழ்நாட்டில் வாக்காளர்களாக மாறும் 6.5 லட்சம் பீகார் மக்கள்.. யாருக்கு வாக்களிப்பார்கள்?

சுதந்திர தினம் உள்பட இந்த மாதம் 15 நாட்கள் வங்கி விடுமுறை.. முழு விவரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments