Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாதுகாப்பிற்கு பங்கம்... திருமுருகன் காந்தி வருத்தம்!

Webdunia
திங்கள், 19 ஜூலை 2021 (13:01 IST)
என்னுடைய செல்போன் உளவு பார்க்கப்பட்டது சட்ட விரோதமானது என திருமுருகன் காந்தி வருத்தம் தெரிவித்துள்ளார். 

 
இஸ்ரேலைச் சேர்ந்த என்.எஸ்.ஓ என்ற நிறுவனத்தின் PEGASUS சாப்ட்வேர் மூலம் வேவு பார்ப்பதற்கு 50,000-த்திற்கும் மேற்பட்ட செல்போன்கள் இருந்துள்ளது. இதில் இந்தியாவைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோரது செல்போன் எண்களும் உள்ளன. அதில் ஒருவர் திருமுருகன் காந்தி. 
 
இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, என்னுடைய செல்போன் உளவு பார்க்கப்பட்டது சட்ட விரோதமானது. ஒட்டுக்கேட்பு மனித உரிமை செயற்பாட்டாளர்கள், ஊடகத்தை அச்சுறுத்தும் செயல். இது தொடர்ச்சியாக அனைவருக்கும் நடக்கும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. தற்போது பாதுகாப்பு கேள்விக் குறியாகியுள்ளது என வருத்தம் தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments