Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சனாதனப் பாதையைத் தவிர்த்து சமத்துவத்தை நிலைநாட்டியவர்; பங்காரு அடிகளார் குறித்து திருமாவளவன்..!

சனாதனப் பாதையைத் தவிர்த்து சமத்துவத்தை நிலைநாட்டியவர்; பங்காரு அடிகளார் குறித்து திருமாவளவன்..!
, வெள்ளி, 20 அக்டோபர் 2023 (15:08 IST)
சனாதனப் பாதையைத் தவிர்த்து இந்து மதத்தில் பாலின சமத்துவத்தை நிலைநாட்டியவர் பங்காரு அடிகளார் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
 
அம்மா என்று செவ்வாடை பக்தர்களால் அன்போடு அழைக்கப்பட்ட சித்தர் பீடத்தின் நிறுவனர் பங்காரு அடிகளாரின் மறைவு வேதனையளிக்கிறது;
 
சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னர் ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றங்களைத் துவக்கி பெண்களே கோயிலின் கருவறைக்குள் சென்று பூசை செய்வதற்கு வழிவகுத்தார்;
 
பெண்களைப் பூசை செய்ய வைத்ததோடு, மாதவிடாய்க் காலத்திலும் கோயிலில் சென்று வழிபடலாம் என்கிற அவரது நிலைபாடு ஆன்மீகத் தளத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது;
 
இந்திய அளவில் ஆன்மீகத்தின் ஒரு மாற்று அடையாளமாகத் திகழ்ந்தவர்; 
 
சனாதனப் பாதையைத் தவிர்த்து இந்து மதத்தில் பாலின சமத்துவத்தை நிலைநாட்டியவர்;
 
அத்தகைய சிறப்புகளுக்குரிய அடிகளாரின் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும், அவருக்கு எமது அஞ்சலியைத் செலுத்துகிறோம்"
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

செந்தில் பாலாஜிக்கு 9வது முறையாக நீதிமன்றக் காவல் நீட்டிப்பு..!