Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சனாதனம் ஒழிப்பு குறித்த பேச்சு.. நீதிமன்றத்தில் அமைச்சர் உதயநிதி தரப்பு பதில்..!

Advertiesment
சனாதனம் ஒழிப்பு குறித்த பேச்சு.. நீதிமன்றத்தில் அமைச்சர் உதயநிதி தரப்பு பதில்..!
, திங்கள், 16 அக்டோபர் 2023 (18:06 IST)
சனாதன ஒழிப்பு மாநாட்டில் சமீபத்தில் அமைச்சர் உதயநிதி கலந்து கொண்டு சனாதத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இது குறித்து அவர் மீது வழக்கு தொடரப்பட்டிருந்த நிலையில் இந்த வழக்கில் உதயநிதி சார்பில் நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அந்த விளக்கத்தில் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என கூறியது அரசியல் அமைப்பு சட்டத்திற்கு விரோதமானதா? என்று கேள்வி எழுப்பிய நிலையில் தனிப்பட்ட முறையில் சொன்னேனே தவிர அமைச்சர் என்ற முறையில் பேசவில்லை என்று அமைச்சர் உதயநிதி சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி பேசிய வழக்கை இந்து முன்னணி நிர்வாகிகள் தொடர்ந்த நிலையில் இந்த வழக்கு விசாரணை மீண்டும் அக்டோபர் 31 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டிடிஎஃப் வாசனுக்கு மீண்டும் நீதிமன்ற காவல் நீட்டிப்பு.. எத்தனை நாள் தெரியுமா?