Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சசிகலாவின் முடிவு காலம் தாழ்ந்தது: திருமாவளவன்

Webdunia
சனி, 16 அக்டோபர் 2021 (16:48 IST)
சமீபத்தில் முடிவடைந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக வரலாறு காணாத வெற்றியைப் பெற்ற நிலையில் இன்னொரு பக்கம் அதிமுக வரலாறு காணாத தோல்வியை தழுவியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இதனால் சோர்ந்து போயிருக்கும் அதிமுக தொண்டர்களுக்கு குஷிப்படுத்தும் வகையில் சசிகலா தீவிர அரசியலில் ஈடுபடப் போவதாக கூறப்பட்டது. இதனையடுத்து இன்று காலை எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சமாதியில் மரியாதை செய்த சசிகலா, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகிய இருவரும் கட்சியை காப்பாற்றுவார்கள் வேண்டும் என் மனக்குமுறலை ஜெயலலிதாவுடன் கூறியிருக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார் 
 
இந்த நிலையில் அதிமுகவை சசிகலா கைப்பற்றுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இது குறித்து கருத்து கூறிய விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்கள் ஜெயலலிதா நினைவிடத்திற்கு சசிகலா சென்றது தனிப்பட்ட விவகாரம் என்றும் ஆனால் அவரது நடவடிக்கையை வரவேற்கிறேன் என்றும் இருப்பினும் அதிமுகவை கைப்பற்ற சசிகலாவின் முடிவு காலம் தாழ்ந்தது என்றும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிராவில் முட்டாள் அரசாங்கம் நடக்கிறது: ஆதித்ய தாக்கரே கடும் தாக்கு..!

இயக்குநர் பிருத்விராஜ் மனைவி ஒரு நகர்ப்புற நக்சல்: பாஜக குற்றச்சாட்டு..!

மோடிக்கு பின்னர் யோகி ஆதித்யநாத் தான் பிரதமரா? அவரே அளித்த தகவல்..!

விளம்பர ஷூட்டிங்கில் வந்து வசனம் பேசினால் மட்டும் போதாது: முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments