Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா மரியாதை..!!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா மரியாதை..!!
, சனி, 16 அக்டோபர் 2021 (12:19 IST)
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா மரியாதை..!!
முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் சமாதியில் இன்று சசிகலா மாலை அணிவித்து மரியாதை செய்ய இருப்பதாக தகவல் வெளியான நிலையில் சற்று முன்னர் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் சசிகலா மரியாதை செய்துள்ளார். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா கடந்த சில மாதங்களுக்கு முன் விடுதலையான நிலையில் தீவிர அரசியலில் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. 
 
ஆனால் அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த சசிகலா சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவின் தோல்விக்குப் பின்னர் மீண்டும் தீவிர அரசியலில் இறங்க இருப்பதாக கூறப்படுகிறது.
 
இதனை அடுத்து அவர் இன்று எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சமாதி மரியாதை செலுத்தினார். மேலும் இன்று அவர் தனது அரசியல் வருகை குறித்து அறிவிப்பார் என்றும் கூறப்பட்டு வருகிறது. சிறையில் இருந்து விடுதலையான பின் முதன்முறையாக ஜெயல‌லிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைவு: மக்கள் மகிழ்ச்சி