Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிறுத்தைகள் மீண்டும் களமிறங்குவோம். ஈவிஎம் மிஷினுக்கு எதிராக திருமாவளவன் போராட்டம்..!

சிறுத்தைகள் மீண்டும் களமிறங்குவோம். ஈவிஎம் மிஷினுக்கு எதிராக திருமாவளவன் போராட்டம்..!

Siva

, திங்கள், 19 பிப்ரவரி 2024 (07:55 IST)
வாக்குப்பதிவு இயந்திரத்துக்கு எதிராக பலர் போராட்டம் நடத்தி வரும் நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக பிப்ரவரி 23ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும் என திருமாவளவன் ஆவேசமாக தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:


ஈவிஎம் பிரதமர் மோடி. இது வட இந்தியர்கள் மோடிக்கு வைத்துள்ள 'நிக் நேம்'.  செல்லப்பெயர்.

"மக்கள் இவரைத் தேர்ந்தெடுக்கவில்லை. மாறாக, ஈவிஎம் எனப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் சதிவேலைகளை செய்து மோசடியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் தான் மோடி" -என கூறி, ஈவிஎம்' மை எதிர்த்து வட இந்தியாவில் போராட்டம் வலுக்கிறது.

ஆதலால், சிறுத்தைகள் மீண்டும் களமிறங்குவோம்.

நாட்டைக் காக்க-
நாடாளுமன்ற சனநாயகம் காக்க - தேர்தல் முறையின் மீதான மக்களின் நம்பகத்தன்மையைக் காக்க-

சிறுத்தைகள் யாவரும் சினந்தெழுவோம்! - மோடியின் ஈவிஎம் சதி வீழ்த்த  இணைந்தெழுவோம்!

பிப்ரவரி 23 - வெகுண்டெழுவோம்!

Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கிளாம்பாக்கம் சென்ற பேருந்து மீது இளைஞர்கள் கல்வீச்சு.. மதுரவாயல் அருகே பரபரப்பு..!