சாதி ஆணவ படுகொலைகளுக்கு காரணம் திருமாவளவன்தான்! - எச்.ராஜா பரபரப்பு குற்றச்சாட்டு!

Prasanth Karthick
ஞாயிறு, 23 மார்ச் 2025 (14:45 IST)

தமிழ்நாட்டில் சாதிய ஆணவ படுகொலைக்கு காரணம் திருமாவளவன், சுப.வீரபாண்டியன் போன்றவர்கள்தான் என எச்.ராஜா குற்றம் சாட்டி பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

தமிழக பாஜக மூத்த உறுப்பினரான எச்.ராஜா தொடர்ந்து பல்வேறு சர்ச்சை பேச்சுகளால் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். சமீபத்தில் சென்னை தி.நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் எச்.ராஜா கலந்துக் கொண்டார்.

 

அப்போது தமிழ்நாட்டில் சாதி ஆணவ படுகொலைகள் குறித்து பேசிய அவர் “தமிழகத்தில் சாதி ஆணவ படுகொலைகளுக்கு காரணம் திருமாவளவன் தான். திருமாவளவனும், சுப.வீரபாண்டியனும் பிறக்கும் முன்பும் தமிழ்நாட்டில் சாதி மறுப்பு திருமணங்கள் நடந்திருக்கின்றன. இவர்கள் வன்முறையை தூண்டி விடுகின்றனர்” என பேசியுள்ளார்.

 

எச்.ராஜாவின் இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று வெளியான இன்னொரு கருத்துக்கணிப்பு.. பீகாரில் ஆட்சி மாற்றமா?

பின்லேடனின் பேச்சை மொபைல் போனில் வைத்திருந்தமென்பொறியாளர் கைது.. டெல்லி சம்பவத்திற்கு தொடர்பா?

மோடி எங்கள் டாடி.. நாங்கள் சொன்னால் கேட்பார்: ராஜேந்திர பாலாஜி

தமிழகத்தில் 78% SIR படிவங்கள் விநியோகம்: தேர்தல் ஆணையம் தகவல்!

கர்நாடக பள்ளி கழிவறையில் கேட்ட பயங்கர சத்தம்.. குண்டு வெடிப்பா என மக்கள் அச்சம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments